தமிழகத்தில் 10 அரசு துறைகளின் பெயர் மாற்றம் – இன்று அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் புதிதாக தலைமை ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துறைகளின் பெயர்களை மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழாகத்தில் கடந்த மாதம் புதிய முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பில் இருந்து 5 முக்கிய அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டார். அதில், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச கட்டணம், ரூ.4000 கொரோனா நிவாரண தொகை ஆகியவை அமல்படுத்தப்பட்டன.
இந்தியாவில் வீரியம் குறையும் கொரோனா நோய்த்தொற்று – ஒரே நாளில் 86,498 பேர் பாதிப்பு!!
மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர். இவை அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ரேஷன் கடைகளில் முதல் தவணை தொகையை மே மாதமே வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, ஜூன் மாதத்திற்கான கொரோனா நிவாரணம் தொகை ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மே 7 ஆம் தேதி அவர் ஆட்சி பொறுப்பேற்கும் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வேளாண்மை துறை என்பது வேளாண்மை-உழவர் நலத்துறை எனவும், சுற்றுசூழல் துறை என்பது சுற்றுசூழல்- காலநிலை மாற்றத்துறை எனவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் மக்கள்நலவாழ்வுத்துறை என்பது மருத்துவம்- மக்கள் நலவாழ்வுத்துறை எனவும், மீன்வளத்துறை என்பது மீன்வளம்- மீனவர் நலத்துறை என்றும், சமூக நலத்துறை என்பது சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை என்றும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 10 துறைகளின் பெயர்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.