தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைத்து விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் அமைப்பு கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. கொரோனா நோய்பரவலை கருத்தில் கொண்டு +2 மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்தி வைத்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில், ‘கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகி வரும் வேளையில் 9.5 லட்சம் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சூழல் உள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதே போல விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
பல பள்ளிகள் கொரோனா தடுப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், நீரிழிவு மற்றும் பல்வேறு இணை நோய் உள்ளவர்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு, கோடைகாலம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக +2 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டிருந்தது.