இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அறிக்கை:
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள் தொடங்கி எந்த நாடும் கொரோனா பெருந்தொற்றின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதனால் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கிவிட்டது என மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் நோய்த் தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளது.
மேலும் முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாமை போன்ற அலட்சிய போக்கை மக்கள் கடைபிடிக்கும் பட்சத்தில், நான்காம் அலையை தடுக்க முடியாது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் கட்டாயம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க திட்டம் – யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் விளக்கம்!
- புதிதாக 12,608 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864ஆக உயர்ந்தது.
- புதிதாக 72 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,206ஆக உயர்ந்தது.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,251 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,70,315ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.
- சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.
- இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,01,343 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இந்தியாவில் மொத்தமாக இதுவரை 2,08,95,79,722 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்