தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 2021- 2022 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் எடுத்ததால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. ஆனால் தொற்றின் தாக்கம் தீவிரம் எடுத்தால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரியில் DA 3% உயர்வு – 7வது ஊதியக்குழு அறிக்கை!
அதனை தொடர்ந்து 2021-2022 ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு தொடங்கியதும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் யாருக்கும் ஓமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை ஆனாலும் முன்னெச்சரிகையாக தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் 2022 ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.