தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் 109 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் அரசாணை:
நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை 28 டிசம்பர் 2020 அன்று முதல் பிரிக்கப்பட்டது.
ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!
இந்நிலையில் இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி என நான்கு வருவாய் வட்டங்கள், 15 குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. இதனையடுத்து 100 கோடி ரூபாய் செலவில், மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு, ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் அதிகாரிகளுக்கு ஊதியம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக 8 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The best