ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

0
ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

இன்றுடன் துவங்கியுள்ள ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் பதினைந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் பொது விடுமுறை காரணமாக வங்கிகள் ஒன்பது நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்

பொதுவாக மாதந்தோறும் வார இறுதி நாட்கள், 2 சனிக்கிழமைகள் தோறும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். தவிர ஒவ்வொரு மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் வங்கிகள் செயல்படாது. அந்த வகையில் தற்போது துவங்கியுள்ள ஜூலை மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இரண்டாவது, நான்காவது சனி மற்றும் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்காட்டி பட்டியல் தெரிவித்துள்ள படி, 9 விடுமுறை நாட்களும் வெவ்வேறு மாநிலங்களுக்கான பொது விடுமுறைகள் ஆகும். எனவே, இந்த விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூபா யாத்திரை காரணமாக புவனேஷ்வர் மாநிலம் முழுவதும் ஜூலை 12 அன்று வங்கிகள் இயங்காது.

மேலும் காங் (ரதஜத்ரா) காரணமாக ஜூலை 12 ஆம் தேதி அன்று இம்பாலில் வங்கிகளும் மூடப்படும். தொடர்ந்து ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், பானு ஜெயந்தி மற்றும் ட்ருக்பா செச்சி உள்ளிட்ட பண்டிகைகளை தொடர்ந்து சிக்கிமில் வங்கிகள் மூடப்படும். ஹரேலா பண்டிகை காரணமாக ஜூலை 16 ஆம் தேதி அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை 17 ஆம் தேதியில் யு டிரோட் சிங் டே மற்றும் கார்ச்சி பூஜை காரணமாக அகர்தலா மற்றும் ஷில்லாங் மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. ஜூலை 19 அன்று சிக்கிமில் குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு காரணமாக வங்கிகள் மூடப்படும்.

TN Job “FB  Group” Join Now

ஜூலை 20 ஆம் தேதி, பக்ரித் காரணமாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் கொச்சியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். தொடர்ந்து ஜூலை 21 அன்று, பக்ரி ஐடி தினத்தில் புவனேஸ்வர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் தவிர, கேரளாவில் உள்ள மற்ற அனைத்து வங்கிகளும் மூடப்படும். ஜூலை 31 ஆம் தேதி அன்று அகர்தலாவில், கெர் பூஜா காரணமாக வங்கிகள் மூடப்படும். இது தவிர ஜூலை 4, 11, 18, 25 உள்ளிட்ட 4 ஞாயிற்று கிழமைகளிலும், ஜூலை 10, 24 ஆகிய 2 சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!