தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் கவனத்திற்கு – ரூ.3006 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தொகையை பயன்படுத்தி மேற்கொள்ளப் போகும் பணிகள் குறித்த பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்:
இந்தியாவில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஊரடங்கு காலத்திலும் கிராம பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்பட்டது. மேலும் கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு ஊதியத்தை 250 திலிருந்து 275 ஆக உயர்த்தியது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்கு ரூ.3006 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சென்றடையும், 2,750 கி.மீ நீளத்திற்கான ஓரடுக்கு கப்பிச்சாலைகள், 800 கி.மீ நீளத்திற்கான சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் 800 கி.மீ நீளத்திற்கு பேவர்பிளாக் சாலைகள் ஆகியவை ரூ.1346 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்யப்பட உள்ளது.
விமானத்தில் பணிபுரிய ஆவலா? பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு..!
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க 350 கி.மீ. நீளத்திற்கு வடிகால் வசதி, 25,500 சமுதாய உறிஞ்சு குழிகள் மற்றும் 1.75 லட்சம் தனிநபர் உறிஞ்சுகுழிகள் ஒன்றிய, மாநில நிதிப்பங்களிப்புடன் ரூ.431.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. நீர் மற்றும் நில வளத்தை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், விவசாயத்திற்கான பாசன வசதியை மேம்படுத்திடவும் 10,000 தடுப்பணைகள், 5,000 பண்ணை குட்டைகள், தனி நபர் நிலங்களில் மண் வரப்பு மற்றும் கல் வரப்பு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஊரக பகுதிகளில் பனை பொருட்கள் சார்ந்த வேலைவாய்ப்பினை பெருக்கவும், 25 லட்சம் பனை விதைகள் ரூ.87.26 கோடியில் விதைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.