10,000 அரசு பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியீடு.. முதல்வர் தகவல்!
அசாம் மாநிலத்தில் 10,000 அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
நாடு முழுவதும் மாநில அரசுகள் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநில அரசு 10,000 அரசு பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் நாங்கள் 1 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டோம். தற்போது வரை 40,000 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு – டீசல் வாகனங்களை நிறுத்த முடிவு!
Exams Daily Mobile App Download
மீதியுள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கட்டமாக 10,000 பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வனத்துறையில் 1700 பணியிடங்களும், கல்வித்துறையில் 6 – 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு டிச.31ம் தேதிக்குள் வெளியிடப்படும். இந்த பணிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.