இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு – டீசல் வாகனங்களை நிறுத்த முடிவு!
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசத்தில் உள்ள நொய்டா மாநகராட்சி குப்பைகளை கொட்டும் டீசல் வாகனங்களை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
நொய்டா:
இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இன்றைக்கு தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் உள்ளது. காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசுபாடு முன்பை விட அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒரு வகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து தான் பெருமளவு புகை வெளியேறுகிறது. இதனை தடுக்கும் வகையில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இனி மத்திய அரசின் போட்டி தேர்வுகள் ஹிந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படும்? – அரசு விளக்கம்!
Exams Daily Mobile App Download
தற்போது பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவையடுத்து நொய்டா மாநகராட்சி, நகரில் டீசல் வாகன பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த டீசல் வாகனங்கள் அதிகப்படியான நச்சு கலந்த வாயுக்களை வெளியிடுகிறது. அதனால் இந்த டீசல் வாகனங்களை நிறுத்தி அதற்கு பதிலாக இயற்கை எரிவாயு வாகனங்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கான முதற்கட்ட முயற்சிகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.