குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு உறுதி!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு தேர்வான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்றே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும்பாலான குடும்ப தலைவிகளுக்கு நேற்றே ரூ.1000 செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – 482வது நாளாக மாற்றம் இல்லை!
இதே போல ஒவ்வொரு மாதமும் சரியாக 1.06 கோடி பேருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது அடுத்தடுத்த மாதங்களில் எப்போது ரூ.1000 வரவு வைக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பட்டிருந்தது . இது குறித்து பதிலளித்த தமிழக அரசு இந்த திட்டத்திற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு சரியாக ரூ.1000 வரவு வைக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.