சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – 482வது நாளாக மாற்றம் இல்லை!
தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி இன்று (செப்.15) விலையில் எந்த மாற்றமும் இல்லை.
விலை நிலவரம்:
தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி வரை பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி 3% உயர்வு – இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு!
அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதன் பின் நேற்று (செப்.14) சென்னையில் பெட்ரோல் ரூ. 8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று (செப். 15) 482வது நாளாக பெட்ரோல் ரூ. 102.63 க்கும் டீசல் ரூ. 94.24 க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.