Post office இல் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள கிராம் சுரக்ஷா திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை மற்றும் முதிர்வு காலம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
கிராம சுரக்ஷா திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை நடுத்தர மக்களுக்கு நிலையான வருமானம் பெற மத்திய அரசு இந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனில் இந்த சேமிப்பு திட்டங்களில் குறைவான அளவு முதலீடு செய்து அதிக வட்டி தொகையை பெற முடியும். அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் இயங்குவதால் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பும் கிடைக்கிறது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட பெருமளவு இதில் இணைகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
இதனை தொடர்ந்து கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் கீழ் கிராம சுரக்ஷா திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையானது 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது உட்பட்டவர்கள் வரை இணைந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை செலுத்தலாம்.
SBI வங்கியில் 2000+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
இதில் பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் செலுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தில் 19 வயதுடையவர் 10 லட்சம் என்ற பாலிசியை தேர்ந்தெடுத்தால் மாதந்தோறும் பிரீமிய தொகையாக ரூ.1,515 செலுத்த வேண்டும். முதிர்வு காலம் முடிவில் அதாவது 55 ஆண்டுகால முடிவில் ரூ. 31.60 லட்சம் சேமிக்க முடிகிறது. அத்துடன் முதிர்வு காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் 58 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.33.40 லட்சம் சேமிக்கலாம். மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்ததால் 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.34.60 லட்சம் சேமிக்க முடிகிறது.