தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – ஜூலை 15 முதல் அமல்!

0
தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் - ஜூலை 15 முதல் அமல்!
தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் - ஜூலை 15 முதல் அமல்!
தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – ஜூலை 15 முதல் அமல்!

தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் அமலுக்கு வருவது தொடர்பாக உயர் கல்வித்துறை கூறியதை பற்றி பார்ப்போம்.

உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்துடன் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகள் பற்றிய நலத்திட்டங்களை அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் PM KISAN பயனாளிகளுக்கு எச்சரிக்கை – தவணைத் தொகையை திரும்ப வழங்க உத்தரவு!

இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12000 ரூபாய் வரை மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெறுவார்கள். அதன்படி இந்த திட்டம் எப்பொழுது அமலுக்கு வரும் என்று பொதுமக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் வருகிற ஜூலை 15ம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இந்த நன்னாளை முன்னிட்டு மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் உயர் கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் சேரும் முதல் வருட கல்லூரி மாணவிகளுக்கு ஜூலை 15 முதல் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அத்துடன் உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் கட்டாயமான முறையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!