தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை? இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுத்தொகை வழங்குவது குறித்து அரசு இன்று (டிச.20) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகை
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் சிறப்பு பரிசும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இலவச வேட்டி சேலைகளும் வரும் ஜன.3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
அந்த வகையில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு சந்தித்து வரும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் கொரோனா பேரலை தொற்று, மழை வெள்ள பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன் படி பொங்கல் சிறப்பு தொகுப்புடன் சேர்த்து பரிசுத்தொகையையும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இது குறித்து ஆய்வு செய்த பிறகு, வரக்கூடிய நாட்களில் பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான அரசு கடந்த ஆட்சி காலத்தில் ரூ.2,500 தொகையை பொங்கல் பரிசாக கொடுத்திருந்தது என்பதால் இந்த ஆண்டும் பரிசுத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.