பள்ளிகளில் 100% மாணவர்களின் வருகை பதிவுக்கு பின் மதிய உணவு திட்டம் துவக்கம் – அரசு தகவல்!
தேசிய தலைநகர் டெல்லியில் 100% மாணவர்கள் வருகையுடன் பள்ளிகள் அனைத்தும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டவுடன் மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மதிய உணவு திட்டம்
கொரோனா 3ம் அலைத்தொற்று காரணமாக டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 7 முதல் நேரடி வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்போது பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவது குறித்து எழுப்பப்பட்டு வரும், கேள்விகளுக்கு 100% மாணவர்கள் வருகையுடன் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டவுடன் இத்திட்டம் துவங்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து DRRAA தனது சட்ட அறிவிப்பில், ‘பள்ளிகளில் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மற்றும் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் போது, சூடான சமைத்த மதிய உணவை வழங்குவதை மறுதொடக்கம் செய்ய எந்த காரணமும் இல்லை. அந்த வகையில் மாணவர்கள் 100% வருகையுடன் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவுடன், மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் திட்டம் என்ன? முழு விளக்கம் இதோ!
அந்த வகையில், டெல்லி ரோசி ரொட்டி அதிகார் அபியான் (DRRAA), பள்ளிகளில் மதிய உணவை மீண்டும் தொடங்குமாறு அரசுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, PM போஷனின் கீழ் மதிய உணவு விநியோகத்தின் போது மாணவர்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் முகக்கவசங்களை முறையாக கழற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.