மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் திட்டம் என்ன? முழு விளக்கம் இதோ!
சீனாவின் ஹாங்காங் நகரத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பெய்ஜிங் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்த ஹாங்காங் அரசின் நிலைப்பாடு பற்றி இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கட்டுப்படுத்த மீண்டும் முழு முடக்கம் தேவைப்படும் என்று சீன அதிகாரிகள், ஹாங்காங் நகர அரசாங்கத்திற்கு அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்த நிபுணர்களின் கூற்றுப்படி, இப்போதைக்கு ஹாங்காங் நகர அரசாங்கம் சில வகையான இலக்கு வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒப்புக்கொண்டது. இந்த நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் அவசியமாக முழு ஊரடங்கு என்பது இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஹாங்காங்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு நாளைக்கு 7,000க்கும் அதிகமான ஓமிக்ரான் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – செயலியில் புதிய குரல் அழைப்பு வசதி விரைவில் அறிமுகம்!
இது குறித்து ஹாங்காங் மெயின்லேண்ட் அதிகாரிகள் கூறுகையில், குறுகிய காலத்தில் வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ரகசியமானது என்பதால் ஊரடங்கு குறித்து அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங் நகர் அதிகாரிகள் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலியுறுத்தினாலும், முழு ஊரடங்கு என்பது சாத்தியமில்லை என சில தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை – அதிமுக 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி!
இப்போது ஹாங்காங் நகரத்தின் அடர்த்தி மற்றும் அரசியல் சூழல் ஒரு பரவலான முழு ஊரடங்கை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர். இதற்கிடையில் பிப்ரவரி 15 அன்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறுகையில், ‘நகரம் முழுவதும் முழுமையான, மொத்த லாக்டவுனை விதிக்க அரசாங்கம் எந்த திட்டமும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். என்றாலும் அபார்ட்மென்ட் வளாகங்கள் அல்லது மாவட்டங்களில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிக்க ஹாங்காங் அரசு ஆயத்தப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.