தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!
தமிழகத்தில் கடந்த 9ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்:
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சரியான முறையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இதனால் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் SSLC மற்றும் +2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது.
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இருப்பினும் இந்த திருப்புதல் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் “லீக்”ஆனது, இதனால் திருப்புதல் தேர்வு சாதாரண தேர்வு ,இந்த மதிப்பெண் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள் இடையே விடைத்தாள்கள் பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – செயலியில் புதிய குரல் அழைப்பு வசதி விரைவில் அறிமுகம்!
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது, விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் திருத்தி மதிப்பிடும் மதிப்பெண்கள், மறுகூட்டல் அல்லது மறு திருத்தத்துக்கு வரும்போது கூடுதலோ, குறைவோ ஏற்படாத வகையில் விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் மாணவர்கள் வினாக்களுக்கு உண்டான பதிலை சரியாக எழுதவில்லை என்றாலும் தோல்வி அடையும் வகையில் மதிப்பெண் அளிக்க வேண்டாம். அதற்கு மாறாக ஒற்றை இலக்க எண் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.