தமிழகத்தில் செப். 3 முதல் 100% திரையரங்குகள் இயங்கும் – உரிமையாளர் சங்க தலைவர்!
தமிழகத்தில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 100% திரையரங்குகள் இயங்கும். தற்போது 30 சதவீத திரையரங்குகள் மட்டுமே இன்று இயங்கத் தொடங்கியுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் கூடுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்கள், திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில மாவட்டங்களில் முழுமையாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. திரையிடுவதற்கு புதிய படங்கள் எதுவும் இல்லை. ஊரடங்கு காலத்தில் அனைத்தும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டதால் அவற்றை திரையிட்டால் ரசிகர்களின் வருகை இருக்காது என்று உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை எடுத்த முக்கிய முடிவு – ரத்த மாதிரிகள் பரிசோதனை!
சில மாவட்டங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டும் செயல்படுகிறது. இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், சக்தி சுப்பிரமணியம் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதால் இன்று 30 சதவிகித திரையரங்குகள் மட்டுமே இயங்குகிறது.
TN Job “FB Group” Join Now
செப்டம்பர் 3ம் தேதி முதல் 100% திரையரங்குகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தியேட்டரில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அதை தெரிந்து கொள்ளும் வகையில் பணியாளர்கள் உடைகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டேன் என்ற வாசகம் இருக்கும். தியேட்டருக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும். மேலும் ஒரு காட்சிக்கு இடையே 45 நிமிடம் இடைவெளி வழங்கப்படும் . தியேட்டருக்கு வருவதற்கு 40 படங்கள் காத்திருப்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.