தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு – 10% கட்டண சலுகை அமல்!
தமிழக அரசு பேருந்து கழகம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பதிவு:
தமிழக அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டம் வந்த பிறகு போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிதி நிலையை சரி செய்ய அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பார்சலின் எடையை குறிப்பிட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது அரசு பேருந்தில் தொலைதூர நகரங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 % கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்பட்டு அதே இடத்திற்கு திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர்கள் சலுகை கட்டணத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த 10% கட்டண சலுகை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் https://www.tnstc.in என்ற இணையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்