தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியதால் கேரள மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஓணம் பண்டிகை:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரசித்தி பெற்ற பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைப் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கேரளாவில் இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது, ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு விழாக்களும், பண்டிகைகளும் விமர்சையாக கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் மக்கள் அதிகம் கூடி பண்டிகைகள் கொண்ட கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளதால் மக்கள் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 12 வது தவணை தொகை விரைவில்!

ஓணம் பண்டிகை கேரள மக்கள் மட்டுமின்றி மலையாள மொழி பேசும் தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,ஈரோடு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓணம் பண்டிகையையொட்டி அதிகளவில் மக்கள் பூக்களை பயன்படுத்துவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!