10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை – முதல்வரின் இலக்கு!

0
10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை - முதல்வரின் இலக்கு!

மாநில அரசின் இலக்கான 10 லட்சம் இளைஞர்களுக்கான அரசு வேலை என்ற திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசு பணி வாய்ப்பு:

பீகார் மாநிலத்தில் முதல்வர் நித்திஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்ரீ யாதவ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றியுள்ளார். அப்போது மாநில இளைஞர்களுக்கு 10 லட்சம் அரசு வேலைவாய்ப்பை வழங்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 3.63 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தவிர பல்வேறு துறைகளிலும் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பணிகளை தவிர பிற துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்காக 5 லட்சம் வாய்ப்புகள் முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் சிறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழாக சுமார் 94 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வரையிலான நிதி உதவி வழங்க உள்ளதாகவும், மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாநில அரசு பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடை 50 சதவீதம் முதல் 65 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களின் சமூக வாழ்விற்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குடியரசு தின நிகழ்ச்சியில் ஆளுநர் மற்றும் மற்ற அரசு துறை அதிகாரிகள் உரையாற்றினார்கள்.

Follow our Instagram for more Latest Updates

இந்திய  உச்ச நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!