தமிழக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டில் அரையாண்டு இல்லாதலால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
10 நாட்கள் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக பாடங்களை கற்று வந்தன. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அத்துடன் நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதனால் பொது தேர்வு எழுதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற டிசம்பர் 17 முதல் 24 ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் சார்பில் இணை இயக்குனர் கோபிதாஸ் அவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, பதவிகள்!
தற்பொழுது முதல் தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி-2 ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்கு 10 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி -3 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் தினமும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.