Post Office இல் மாதம் ரூ.1500 முதலீட்டில் 1 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டங்கள்!
சேமிப்பின் அவசியத்தை அறிந்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அஞ்சலகத்தில் மூலம் சேமிக்க பல திட்டங்கள் உள்ளது. அவற்றை பற்றிய தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு திட்டங்கள்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரி விலக்கு போன்ற நன்மைகளும் பெற முடியும். இதனால் பலரும் அஞ்சலக திட்டங்களில் சேமிப்பை தொடங்கியுள்ளனர்.
வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கின் போதும் இ-பாஸ் இருந்தால் அனுமதி | அரசு விளக்கம்!
தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் 5.8% கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், வருடத்திற்கு 4 முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி தொகை கிடைக்கும். இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது உள்ள வட்டி விகிதம் தான் முடியும் வரையிலும் கிடைக்கும். RD திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு நாம் சேமிக்கும் போது குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் 3 ஆண்டுகளில் முடித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சேமிப்பு கணக்குக்கு என்ன வட்டியோ அது தான் கிடைக்கும். RD- ல் மாதம் ரூ.1500 முதலீடு செய்யும் பட்சத்தில் வருடத்திற்கு ரூ.18,000 வீதம் 5 வருடத்திற்கு 90,000 ரூபாய் முதலீடு செய்யப்படும். இதனால் 5 வருடம் கழித்து முதிர்வு தொகையாக 1,04,542 ரூபாய் கிடைக்கும்.
தமிழகத்தில் அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் 10 வயது வரை சேமிக்க முடியும். 7.6% வட்டி விகிதம் அளிக்கப்படும் இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 21 வயதாக உள்ளது. ஆனால் 18 வயதில் திருமணம் முடியும் பட்சத்தில் கணக்கு மூடப்படும். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும். குறைந்தது 15 வருடத்திற்கு இந்த தொகையை செலுத்த வேண்டியிருக்கும், அதற்கு கூறு வடியும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.