வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கின் போதும் இ-பாஸ் இருந்தால் அனுமதி | அரசு விளக்கம்!
கொரோனா 3ம் அலையால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்து வரும் தலைநகர் டெல்லியில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இ-பாஸ் சேவைகள் ஊரடங்கு காலங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் முறை
நாடு முழுவதும் கொரோனா பேரலை தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தேசிய தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் ஆகியவற்றுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ள அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை முழுமையாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Pongal Special – மண்பானையில் சுவையான பொங்கல் செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி இதோ!
இப்போது டெல்லியில் நடைமுறையில் இருந்து வரும் இ-பாஸ் செயல்முறைகள் ஊரடங்கு காலங்களிலும் செல்லுபடி ஆகுமா என்று குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது விலக்கு பெற்ற வகை தொடர்பான இயக்கங்களுக்கு வழங்கப்படும் இ-பாஸ்கள், வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு காலத்திற்கும் செல்லுபடியாகும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாளை ஒரு நாள் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு அறிவிப்பு!
அதாவது, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான தனிநபர்களின் இயக்கம் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது இ-பாஸ் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அத்தியாவசிய இயக்கத்திற்கு, ஜனவரி 4 அல்லது அதற்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு நபர் வைத்திருக்கும் இ-பாஸ் செல்லுபடியாகும் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெளிவுபடுத்தி இருக்கிறது.