நாளை ஒரு நாள் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் நாளை (ஜன.13) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கும் மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு தளர்வு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் அசாம் மாநில அரசு நாளை (ஜன.13) ஒரு நாள் மட்டும் ஊரடங்கு நேரத்தை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் போகலி அல்லது மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.13) இரவு ஊரடங்குச் சட்டத்தை அரசு தளர்த்தியுள்ளது. அந்த வகையில் இரவு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான நேரம் – ஆன்மிக விளக்கம்!
தற்போது அசாம் மாநிலம் முழுவதும் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்போது பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு தளர்வுகளை அளித்துள்ள அரசாங்கம், கொரோனா தொற்றின் நிலைமை மோசமாக உள்ளது என்பதால் பண்டிகை கொண்டாட்டத்தின் போது கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கம்ருப் மாவட்ட நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘இரவு நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதையும், பிஹுவின் போது அதிகாலை ஷாப்பிங்கிற்குச் செல்வதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது மூங்கில் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட “மெஜி” அல்லது “பேலா கர்” என்று அழைக்கப்படும் குடிசை போன்ற அமைப்புகளைச் சுற்றி “உருகா” என்று அழைக்கப்படும் மகர சங்கராந்தியின் முன் சமூக விருந்துடன் மக் பிஹு கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை – அமைச்சர் அதிரடி!
மறுநாள் காலையில், மக்கள் புனித நீராடலுக்குப் பிறகு மெஜியை எரித்து, அதற்கு முன் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த திருவிழா அறுவடை காலத்தின் முடிவை குறிக்கிறது. இப்போது திருவிழாவின் போது சந்தைகளை மூடுவதற்கு கம்ருப் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக துணை ஆணையர் பல்லவ் கோபால் தெரிவித்துள்ளார். இருப்பினும், கூட்டங்களைத் தவிர்க்கும் வகையில், சந்தைகளை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.