தமிழகத்தில் அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழகத்தில் அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள காப்பீடு முகவர் பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அஞ்சல் காப்பீடு முகவர்

தமிழகத்தில் கொரோனா காரணமாக வேலைவாய்ப்பற்ற நிலை மிகவும் அதிகரித்தது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அஞ்சல் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவர் பணியில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திருச்சி NIT இல் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 31,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்பணிக்கு சேர விரும்பும் நபர்கள் 18 வயது முதல் 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000 தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்த வேண்டியிருக்கும்.

ஜனவரி 26 வரை பள்ளிகள் முழுமையாக மூடல் – மாநில அரசு உத்தரவு!

இந்த தொகை வட்டியுடன் இறுதியாக இவர்களுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து வருகிற ஜனவரி 27ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04632-220368 – கோவில்பட்டி , 04636-222313 – சங்கரன்கோவில், 04633-222329 – தென்காசி என்ற அஞ்சலகங்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!