அரசு பேருந்துகளுக்கான டெண்டர் கோர….நாளையுடன் கால அவகாசம் முடிவு – போக்குவரத்துத்துறை தகவல்!
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோர நாளையுடன் கால அவகாசம் முடிவடைவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பேருந்து கொள்முதல்
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் – ஒரே நாளில் 10,093 பேருக்கு தொற்று உறுதி!
இதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 402 பேருந்துகள் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதே போன்று, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 303 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 347 பேருந்துகளும், கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு 115 பேருந்துகளும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 251பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பேருந்துகளை கொல்முதல் செய்வதற்கான டெண்டர் கோர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது தொடர்பான விரிவான தகவல்களை பெற http://www.tenders.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.