அரசு ஊழியர்களுக்கு பூஜ்ஜிய அகவிலைப்படி கணக்கீடு எப்போது? – வெளியான தகவல்!

0
அரசு ஊழியர்களுக்கு பூஜ்ஜிய அகவிலைப்படி கணக்கீடு எப்போது? - வெளியான தகவல்!

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் பூஜ்ஜிய (0) டிஏ கணக்கீடு எந்த மாதத்திலிருந்து தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு

7வது ஊதியக்குழு விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு, ஊழியர்களுக்கு 50 சதவீத படியாக வழங்கப்படும். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரியில் 50 சதவீதமாக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 2024 முதல் பெறப்படும் அகவிலைப்படியானது பூஜ்ஜியத்திலிருந்து (0) கணக்கிடப்படும். ஆனால், அதன் எண்கள் ஜனவரி மற்றும் ஜூன் இடையே AICPI குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || சம்பளம்: ரூ.1,12,400/-

வழக்கமாக ஏஐசிபிஐ எண்கள் பிப்ரவரியில் வெளியிடப்படும். அதன் பின் 50 சதவீத அகவிலைப்படி 1% உயர்த்தப்பட்டு அகவிலை 51 சதவீதமாக மாறும். ஆனால் பிப்ரவரி மாதம் முடிந்தும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் பூஜ்ஜியமாகக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஐசிபிஐ இன்டெக்ஸ், அகவிலைப்படி 3 சதவீதமா, 4 சதவீதமா அல்லது எவ்வளவு என்பதை தீர்மானிக்கும். அதன் பின் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அகவிலைப்படி சேர்க்கப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!