TNPSC குரூப் 2 தேர்வில் மாற்றம் – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC குரூப் 2 தேர்வில் மாற்றம் - தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ பதவிக்கான பிரதான தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்துள்ளது.

தேர்வு முறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 தேர்வில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த மாற்றம் குரூப் 2ஏ தேர்வு முதல் நிலை தகுதி தேர்வில் வராது. குரூப் 2ஏ பிரதான தேர்வில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த தேர்வில், பகுத்தறியும் திறன், பொது நுண்ணறிவு திறன் அறிதல் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாதம் ரூ.42,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கில கேள்விகள் பகுதி, கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.பிரதான தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதிக்கான முதல் தாளில் மட்டும், குறிப்பிட்ட அளவுக்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். 2ஆம் தாளில் எத்தனை  மதிப்பெண் வேண்டும் என்றாலும் எடுக்கலாம். அது தரவரிசை பட்டியலுக்கான கணக்கில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!