தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது குறித்து உயர்நீதிமன்றம் ஆனது தகவல் வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தகவல்:
நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து தரப்பு மக்களும் மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றத்திற்கு கொண்டு செல்வது இயலாத காரியம் என்பதால் மாநிலம் தோறும் மாநில உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற மனு குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
ஜூன் 4ம் தேதி வரை நெல்லையில் ‘இதற்கு’ தடை – காவல் துறை உத்தரவு!
நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் மொத்த வளாகத்திற்கும் சிஐஎஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக வழக்கின் விசாரணையை தானாக முன்வந்து எடுத்தது. அப்போது உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து குழு ஆய்வு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது சாத்தியம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.