ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த “யாரடி நீ மோகினி சீரியல்” நடிகைகள் – அவரே வெளியிட்ட வீடியோ!
ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான திகில் சீரியல் யாரடி நீ மோகினியில், ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த வீடியோ ஒன்றை அந்த சீரியலில் பேயாக நடித்த யமுனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யாரடி நீ மோகினி:
ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24 துவங்கிய யாரடி நீ மோகினி சீரியல் சுமார் 4 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமானுஷ்யம், திகில் மற்றும் பாசம் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி ஒளிபரப்பப்பட்டதால் இந்த சீரியலுக்கு இந்த நாள் வரை ரசிகர்கள் குறையாமல் உள்ளனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்திராவிற்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.
மேலும் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை பாத்திமா பாபு அசத்தலான நடிப்பை கொடுத்தார். விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த வகையில் பல்வேறு ட்விஸ்ட்களுடன் அதிரடியாக சென்று கொண்டிருந்த யாரடி நீ மோகினி சீரியல் முடிந்துள்ளது. இந்நிலையில் அதில் பேயாக நடித்த நடிகை யமுனா தற்போது அதில் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்தரத்தில் கயிறில் தொங்குவது போல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த “பாக்கியலட்சுமி” ஜெனி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லியாக நடித்த சைத்ராவுக்கும் பேயாக நடித்த யமுனாவுக்கும் மிகப்பெரிய சண்டை நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்காக ரோப், க்ரெயின், ஜாக்கி போன்ற சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து பெரிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கம் செய்திருந்தனர். இதில் நடிகைகள் இருவருக்கும் டூப் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதத்தை அதில் நடித்த நடிகை யமுனா இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் சைத்ராவும், யமுனாவும் ரோப்பின் உதவியுடன் எப்படி நடித்தனர் என்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இருவரது அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.