விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட இருக்கும் புதிய மாற்றம் – ப்ரோமோவில் கமல்ஹாசன் தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கும் நிலையில் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படும் போட்டியாளர்கள் யார் என்கிற விவரம் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வார இறுதி எபிசோடு என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரமும், அமர்க்களமுமாக இருக்கும். ஏனென்றால் வார இறுதி நாளுக்கான எபிசோடுகளில் தான், அந்த வாரத்தில் நடைபெற்ற எல்லா நிகழ்வுகளையும் அலசி ஆராயும் முக்கியமான காட்சிகள் ஒளிபரப்பப்படும். குறிப்பாக இந்த வாரத்தில் தான் ‘பிக்பாஸ்’ சீசன் 5க்கான முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. இந்த எலிமினேஷனுக்கு மொத்தம் 17 போட்டியாளர்களில் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருக்கின்றனர்.
ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த “பாக்கியலட்சுமி” ஜெனி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
அது யார் என்கிற சஸ்பென்ஸ் இந்த வார இறுதி எபிசோடில் அறிவிக்கப்பட இருக்கிறது. அது யார் என்கிற கேள்வி இப்போதில் இருந்தே எழத்துவங்கியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக தற்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5க்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையையைும், அவர்களின் கதையையும் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். 15 பேர் இந்த வீட்டில் இருந்து நாமினேட் செயப்பட்டிருக்கிறார்கள்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனா கடந்து வந்த பாதை – ‘LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை’!
இப்பொழுது நீங்கள் அளித்திருக்கும் வாக்குகள் இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை இன்றிலிருந்தே பார்க்கப்போகிறீர்கள்’ என்று கமல் பேசியுள்ளார். இதிலிருந்து இந்த வாரத்துக்கான போட்டியில் யார் சேவ் செய்யப்படுவார்கள் என்பது இன்றைய எபிசோடுகளில் வெளியாகிவிடும் என தெரிகிறது. இதற்கு மத்தியில் இந்த வார எலிமினேஷனில் அபிஷேக் ராஜா, சின்னப் பொண்ணு மற்றும் அபினய் ஆகியோருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வார பிக்பாஸ் ஷோவில் இருந்து சின்னப்பொண்ணு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.