தாஜ்மகாலை சூழும் யமுனை ஆற்று வெள்ளம் – ஆய்வாளர்கள் முக்கிய அறிவிப்பு!
யமுனை ஆற்றின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தாஜ்மகாலை வெள்ள நீர் சூழும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தொல்பொருள் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
வெள்ளம்:
டெல்லியில் அதிக அளவில் பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது யமுனை ஆற்றின் நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000 நிதி உதவி வழங்க இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் அதிக அளவில் பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் தற்போது யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலின் சுவரை எட்டி உள்ளது. இதனால் நீர் வரத்து அதிகமானால் தாஜ்மகாலை வெள்ளம் சூலுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் தாஜ்மகாலின் வெளித்தளத்திற்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும், யமுனை நதியின் நீர்மட்டம் இன்னும் 499.1 அடி உயர வாய்ப்புள்ளது. இதனால், தாஜ்மஹாலின் மெஹ்தாப் பாக், ஜோஹ்ரா பாக், ராம்பாக் போன்ற நினைவுச் சின்னங்களை வெள்ளம் மூழ்கடிக்க வாய்ப்புள்ளதாக தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டாலும் தாஜ்மஹாலுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.