தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த நிபந்தனைகள் – அரசு தளர்வு வழங்குமா? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த நிபந்தனைகள் - அரசு தளர்வு வழங்குமா? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த நிபந்தனைகள் - அரசு தளர்வு வழங்குமா? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த நிபந்தனைகள் – அரசு தளர்வு வழங்குமா? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயன்களை பெறுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் அரசு தளர்வுகளை கொண்டு வருமா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

உரிமைத்தொகை நிபந்தனைகள்

தமிழகத்தில் அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த திட்டம் செப் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கும் நிலையில், அதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒரு கோடி பேரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வழிகாட்டு நெறிமுறைகளில் பல நிபந்தனைகள் இருப்பதால் பல குடும்பத் தலைவிகளுக்கு இந்த பலன் கிடைக்காத நிலை ஏற்பட இருக்கிறது.

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!

தேர்தல் அறிக்கையில் அனைத்து இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வழிகாட்டு நெறிமுறைகளில் அப்படி இல்லை. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வாங்குபவர்களுக்கும், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மகளிர் உரிமைத் தொகை பயனை பெற முடியாது. அதனால் இந்த நிபந்தனைகளில் அரசு தளர்வு அளிக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!