ஆவின் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி – அமைச்சர் நாசர் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சேலம் ஆவின் நிறுவனத்தில் ஆவின் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக நேரில் சென்றார். பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கு பணியில் இருந்த தொழிலாளிகளிடம் பணியின் பாதுகாப்பு குறித்து கேட்டு அறிந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவுறுத்தல்!
அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ரூ.270 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 1.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், இடைநிலை புரோக்கர்கள் மூலம் 234 பேர், 460 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 174 பேர் மேலாளர் தகுதி நியமனம் ரத்து செய்யப்பட்டு, புதிய நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மதுரை, தேனி மற்றும் சேலம் போன்ற ஆவின் ஒன்றியங்களில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது. அதேபோல், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி அவர்களின் வீட்டுக்கு 1.5 டன் அளவிற்கு இனிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான தொகையை அவர் செலுத்தவில்லை. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, இதற்கான விசாரணை நடவடிக்கை தொடங்கப்படும். மேலும், பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகள் 48 பேருக்கு கருணை அடிப்படையில் விரைவில் பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.