தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அரசு தடுப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். மாவட்டங்களுக்கு நேரில் சென்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு நோயின் தீவிரம் காரணமாக மேலும் ஊரடங்கு எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்பட்டது. தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தும் பணியை மேற்கொண்டது.
ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
இதன் பயனாக கொரோனா பரவல் சற்று குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய முதல்வர், அரசின் விதிமுறைகளை பின்பற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நாம் மக்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தி முடிக்கவில்லை. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொற்று குறைந்து வந்ததாலும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலையிலும் உள்ளது. அதன் காரணமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை உணர்ந்து பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்துதல் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். கொரோனா இல்லாத தமிழகம் ஆக மாற்ற அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.