தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை காப்பீடு திட்டத்தில் இணைக்கும் பணி – 28ம் தேதி தொடக்கம் !
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளை காப்பீடு திட்டத்தில் இணைக்கும் பணியை முதல்வர் தொடங்க உள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காப்பீடு திட்டத்தில் இணைக்கும் பணி:
தமிழகத்தை தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அத்துடன் செயற்கை கால், கை தயாரிப்பதற்கான புணர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தையும் முதல்வர் திறக்கிறார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.