திருமணமான தம்பதியர்களுக்கு சூப்பர் நியூஸ்.. மாதம் ரூ.18,500 கிடைக்கும் – மார்ச் 31ம் தேதிக்குள் இணையுங்கள்!!
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் (LIC) பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தில் இணைவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்:
தற்போது மாதந்தோறும் ஓய்வூதியம் பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு சூப்பரான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது PMVVY திட்டத்தின் கீழ் கணவன் மனைவி என இருவரும் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்து ஓய்வூதியம் பெறலாம்.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தின் அதிகபட்ச முதலீடாக முன்னதாக ரூ.7.5 லட்சம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது உச்சவரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கணவன் மனைவி என இருவரும் தலா 15 லட்சம் ரூபாய் என அதன்படி ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. அதன்படி தற்போது நீங்கள் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.2,22,000 வட்டி தொகை கிடைக்கும்.
ட்விட்டரில் இனி இந்த 2 பிரச்சனைகள் இருக்காது.. எலான் மஸ்க் கொடுக்கவுள்ள புதிய அப்டேட்!
இதனை 12 மாதங்களுக்கு என பிரித்தால் ரூ.18,500 ஓய்வூதியமாக உங்களுக்கு வழங்கப்படும். மேலும் இதில் ஒருவர் மட்டும் கூட இணைந்து ஓய்வூதியம் பெறலாம். அதன்படி இதில் 15 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1,11,000 வட்டி தொகையாகவும் மாதத்திற்கு ரூ.9,250 ஓய்வூதியமாகவும் கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 10 ஆண்டுகள். நீங்கள் முதிர்வு காலத்தில் கவலையின்றி இருக்க வேண்டுமா? PMVVY திட்டத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் முதலீடு செய்யுங்கள்.