தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் அரசு நகராட்சி, மாநகராட்சி, அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாத சமயங்களில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் போது அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறது. இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் அளிக்கப்படாது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால், நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் போது தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த 1990 -1991 முதல் 2018-2019ம் கல்வி ஆண்டு முதல் பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட போது, அதிக அளவிலான காலியிடங்கள் ஏற்பட்டது. தேவையான ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமித்தது.
தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் – வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!
Exams Daily Mobile App Download
இவ்வாறு நியமிக்கப்பட்ட 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னதாக 31.12.2021 வரைபணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த பணி நீட்டிப்பு 1.01.2022 முதல் 31.12.2022 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை வழங்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.