மகளிர் சுய உதவிக்குழு கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் – கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கியுள்ள நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறு தொழில் செய்யும் பெண்களுக்கு மைக்ரோ நிதி நிறுவனங்கள் கடன் தொகை வழங்கி வருகிறது. இதன் மூலம் மகளிர் சுயமாக வீட்டில் இருந்தே சிறு அளவிலான தொழில்களை செய்து வந்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் தொழில்களை செய்ய முடியமால் முடங்கி உள்ளனர்.
Windows 10 பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியீடு!
இதனால் மக்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்திற்கு தடை? நீதிமன்றம் மறுப்பு!
இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியும், நுன்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு அவகாசம் வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மாத தவணையை கட்டவில்லை என்றால் 1000 ரூபாய்க்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.