NTA நுழைவுத்தேர்விற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் – UPSC இணையதள வெளியீடு!
தேசிய பாதுகாப்பு அகாடமியின் என்டிஏ நுழைவுத் தேர்வில் பங்கேற்க பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமி:
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் என்டிஏ தேர்வில் பெண்கள் பங்கு பெற அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!
இதற்கு கால அவகாசம் கேட்டு மத்திய அரசு முறையிட்டது. நடப்பு ஆண்டே பெண்களை தேர்வு எழுத அனுமதிப்பது சற்று சிரமமான காரியம் என்று தெரிவித்தது. இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்தாண்டு முதலே என்டிஏவில் பெண்களை சேர்க்க வேணும் என்று தெரிவித்தது. இதனை ஏற்று மத்திய அரசு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஏன்டிஏ தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் விண்ணப்ப பதிவு குறித்த கடந்த ஜூன் 9ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த அறிவிப்பு மத்திய அரசு தேர்வாணை இணையதளத்தில் உள்ளது. மத்திய அரசு தேர்வாணை இணையதளமான www.upsc.gov.in என்ற பக்கத்தில் என்டிஏ தேர்வுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பத்திற்கான இணையதளம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.