மதுரையில் இன்று மதுபான கடைகள் இயங்காது – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மதுரையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபான கடை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் எதுவும் நுழையாதவாறு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை – வலுக்கும் கோரிக்கை!
மேலும், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக மதுரை மாவட்டத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினையும் மீறி இயங்கும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.