இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா? அமைச்சர் எச்சரிக்கை!

0
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா? அமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா? அமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா? அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தடுப்பூசிக்கு போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக பரவி கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழக அரசு பல நல உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது இலவச சைக்கிள்கள், பாடப்புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இலவச மடிக்கணினி வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் தமிழகத்தில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்தியாவில் கொரோனா பரவல் முழுவதும் கட்டுக்குள் வரவில்லை என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு பொறுத்தவரை ஒரு நாளில் 500 பேர் என்ற அளவில் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும் முதல்வரின் அறிவுறுத்தலின் படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!