தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலாகுமா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுமோ என்று பொது மக்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியனும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கியது. மக்களுக்கு உடல் நலன் ரீதியாக மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் பாதிப்பினை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அனைத்து உலக நாடுகளின் அரசும் கடுமையான ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. ஆரம்பத்தில் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பின்னர் அந்தந்த மாநிலங்களில் ஏற்படும் பாதிப்பினை பொறுத்து அமல்படுத்தப்படலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!
அந்த வகையில், கடந்த வருடம் மே மாதத்தில் கடுமையான ஊரடங்கு இறுதியாக அமல்படுத்தப்பட்டது. பின்னர், பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல மாதங்களுக்கு பின்னர், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி உள்ளது. அது மட்டுமின்றி, அதன் உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இது குறித்து எந்த வித அரசு துறை வட்டாரங்களும் இன்று வரை நிருபர்களிடம் பேசவில்லை. சமீபத்தில் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் 4ம் அலை கொரோனா பரவ வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அதனால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் மக்கள் நிம்மதில் இருக்கின்றனர்.