பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி – யார்ன்னு தெரியுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர் சக்கரவர்த்தி தானாம், இனிமேல் பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் வேற லெவல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது வருகின்றனர்.
முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி:
விஜய் தொலைக்காட்சியில் 2017-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும்.இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், தற்போது பிரத்யேகமாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமும் கலவரமும் அதிகமாக இருந்து வருகிறது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்புவதால் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் விறுவிறுப்பு குறையவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது, இருப்பினும் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒருவர் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார். மேலும் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. சுரேஷ் சக்கரவர்த்திதான் இந்த வாரத்தில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டை தீப்பிடிக்க வைக்கப் போகிறார் என்றும், நிகழ்ச்சியில் அவர் களம் இறங்குவதால் இனி விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கு என்பது ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.