தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது? புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்விற்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 12, 13ம் தேதிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் ஜூன் 30ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய இருப்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும்.
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு இத்தனை மாதம் ஆன நிலையில் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.08.2022 அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் 22.08.2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.