தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5 நாட்கள் விடுமுறை
தீபாவளியை இந்திய மக்கள் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை என்பது புராணங்களின் படி மக்களுக்கு பல்வேறு துன்பத்தை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். அப்போது நரகாசுரன் இறக்கும்போது கிருஷ்ணனிடம் தான் இறக்கும் இந்த நாளை பொதுமக்கள் அனைவரும் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால் அன்று முதல் மக்கள் தீபாவளியை விளக்குகளால் ஒளி ஏற்றி பெரும் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். அத்துடன் இத்திருநாளில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பட்டாசுக்கான 18% ஜிஎஸ்டி வரி என மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதனால் இதனை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3வது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கான எச்சரிக்கை – UIDAI அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக பட்டாசு வணிகர்கள், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பட்டாசுக்கான 18% ஜிஎஸ்டி வரியை 12% ஆக குறைக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினர். அத்துடன் பட்டாசு வர்த்தகம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.