அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை! போராட்டம் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை! போராட்டம் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை! போராட்டம் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை! போராட்டம் அறிவிப்பு!

அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

முக்கிய அறிவிப்பு:

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை இருந்தது. இதற்கிடையே ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மையால் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு அதிக செலவு ஏற்பட்டு வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்பிறகும் தொடர்ச்சியாக எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்கின்றன. மேலும் இவ்வாறு விலைவாசி உயர்ந்தாலும் கூட தற்போது அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் இல்லை என சொல்ப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளதால், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

அவர்கள் வரும் திங்கட்கிழமை முதல், நிதியமைச்சகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானில் விரைவில் பட்ஜெட் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் 50% உயர்த்தி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அரசு சம்பள உயர்வை அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கடும் நிதிசுமை நிலவி வரும் இந்த நிலையில், சம்பள உயர்வுக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!