தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இலவச மின் இணைப்பு :

நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொழில் நுட்ப வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. அந்த வகையில் மின்சாரம் என்பது எல்லா தேவைகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்போதைய சூழலில் மின்சாரம் இல்லை என்றால் நாட்டில் எந்த ஒரு செயல்பாடும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மக்களின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இவை அனைத்தும் மின்சாரத்தின் தேவையை இன்னும் அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மின் தேவைகளை அறிந்து தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர், மின் கட்டணத்தில் மாற்றம் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் – இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வாங்கப்பட உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் சூரிய மின் சக்தி பூங்கா திருவாரூரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!