CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அரசு விளக்கம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியாகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
கடந்த 2 ஆண்டுகளாக பல மாநிலங்களில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு பல மாநிலங்களில் வாரிய தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்நிலை கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக நடத்தியதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. தேர்வு முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் உயர்நிலைக் கல்வி பயில விண்ணப்பிக்க முடியாமல் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். அதனால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய இராணுவத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது
இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியிடலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து சிபிஎஸ்இ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. ஆனால் இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்